அணியியல் - சொல்லணி - மடக்கு

371 

     அணி என்று தரித்துக்கொள்ளுவது நிலைபெற்றுள்ள திருநீறே.

     பணிபவனம் தனது ஆகம் மன்னுவார், பணிபவம்நந்து நதாக மன்னுவார்., அன்பர்
 ஆகம், மன்பராகம் - என்று பிரித்துப் பொருள் செய்க. பணி - கீழான; பவம் -
 பிறப்பு; நந்து - இறப்பு; நதாக - இல்லையாம்படி.

     முதல் ஈரடியும் கடை ஈரடியும் மடக்கியவாறு.]

    "கலைநி லாவரு மாலை மணங்கொள்வான்
     மலைய மாருத மாறல மாதர்கண்
     கலைநி லாவரு மாலை மணங்கொள்வான்
     மலைய மாருத மாறல மாதர்கண்"

 எனவும்,

      மேகலை இடையில் நிலைநிற்கப்பெறாத அரிய மாலைக்காலத்தில் தலைவருடைய
 கூட்டத்தை வேண்டிக் காதலோடு கூடியகண் மிக்க அழுகையை நீங்கா; கலைகளை
 உடைய நிலா எழும்; மாலையில் உள்ள மணத்தை நுகரவேண்டி, இப்பெண்ணிடத்தில்
 தென்றல் நீங்காது.

     கலை நில்லா அரு மாலை மணம் கொள்வான் மாதர் கண் மலைய மாருதம்
 மாறல. கலை நிலா வரும். மாலை மணம் கொள்வான் மாதர்கண் மலையமாருதம்
 மாறல் - என்று பிரித்துப் பொருள் செய்க.

     இது முதலடியும், இரண்டாமடியும் நான்கா மடியும் மடக்கியவாறு,]

    "ஓத நின்றுல வாவரும் வேலைவாய்
     மாத ரங்க மலைக்கு நிகரவே
     ஓத நின்றுல வாவரும் வேலைவாய்
     மாத ரங்க மலைக்கு நிகரவே"

 எனவும் வரும். பிறவும் வந்துழிக் காண்க.