623. அவற்றுள்,
      முத்தகச் செய்யுள் தனிநின்று முடியும்.

     இது, முத்தகச் செய்யுளது இயல்பு கூறுகின்றது.

     இ-ள் :   மேல் கூறிய நால்வகைச் செய்யுளுள் முத்தகச் செய்யுள் என்பது
 தனியே நின்று பொருள் பயந்து முற்றுப்பெறும் என்றவாறு.