624. குளகம் பலபாட்டு ஒருவினை கொள்ளும். இது குளகச செய்யுளது இயல்பு கூறுகின்றது.
இ-ள் : குளகச் செய்யுள் என்பது பலபாட்டாய் ஒருவினை கொண்டு முடிவது என்றவாறு.
வினை என்றது ஈண்டு முடிக்கும் சொல்லை, "வினைப் படு தொகுதி" இ.வி. 315) என்றாற்போல.