625. தொகைநிலைச் செய்யுள் தோன்றத் கூறின்
     ஒருவன் உரைத்தவும் பல்லோர் பகர்ந்தவும்
     பொருள்இடம் காலம் தொழில்என நான்கினும்
     பாட்டினும் அளவினும் கூட்டியது ஆகும்.

     இது தொகைநிலைச் செய்யுளது இயல்பு கூறு கின்றது.

     இ-ள் :   தொகைநிலைச் செய்யுள் என்பதனை விளங்கக்கூறின், ஒருவனால்
 உரைக்கப்பட்டுப் பல பாட்டாய் வருவனவற்றையும், பலரால் உரைக்கப்பட்டுப்