வேறுபாடு இன்றுஎன விளம்பினர் புலவர்.
இது மேலதற்கு ஒரு புறனடை கூறுகின்றது.
இ-ள் : மேல் கூறிய உறுப்பில் சில குறைந்து வரினும் பெருங்காப்பியத்தின்
வேறுபாடு இல்லை என்று கூறுவர் அறிந்தோர் என்றவாறு.
குறைதலாவது நாற்பொருளில் குறையாது வருணனைகளில் சில குறைதலாம்;
என்னை? நால்வகைப் பொருளில் குறைபாடு உடையது காப்பியம் என்றலின்.