631. அவைதாம், ஒருதிறப் பாட்டினும் பலதிறப் பாட்டினும் உரையும் பாடையும் விரவியும் வருமே.
இது மேலனவற்றிற்கு ஓர் ஒழிபு கூறுகின்றது.
இ-ள் : மேல்கூறிய பெருங்காப்பியமும் காப்பியமும் ஒருவகைச் செய்யுளானும் பலவகைச் செய்யுளானும் உரையும் பாடையும் விரவியும் வரும் என்றவாறு.
உம்மையான், விரவாது வருதலே வலியுடைத்து எனக்கொள்க.