சொற்றொடர் நிலை

 632. செய்யுள் அந்தாதி சொல்தொடர் நிலையே

     இது சொல்தொடர்நிலை ஆமாறு கூறுகின்றது.

     இ-ள் :   ஒரு செய்யுள் இறுதி மற்றொரு செய்யுட்கு முதலாகத் தொடுப்பது
 சொல் தொடர்நிலைச் செய்யுளாம் என்றவாறு.

     அவை கலம்பகம் முதலியன. இவற்றிற்கு இலக்கியம் வந்தவழிக் கண்டு கொள்க.
 ஈண்டு உரைப்பின் பெருகும்.