639. பண்பும் தொழிலும் பயனும்என்று இவற்றின்
ஒன்றும் பலவும் பொருளொடு பொருள்புணர்த்து
ஒப்புமை தோன்றச் செப்பின் அதுவே
உவமையாம் அதன்திறம் உணர்ந்தனர்கொளலே.
உவமை கூறுவனவற்றுள் இஃது அதன் பொது இயல்பு கூறுகின்றது.
இ-ள் : பண்பு முதலிய மூன்றும் காரணமாக ஒன்றாகியும் பலவாகியும் வரும்
பொருளோடு பொருள் இயைய வைத்து ஒப்புமை புலப்படப் பாடின் அஃது
உவமையாம். அதன் கூறுபாடுகள் எல்லாம் உவமை ஒன்றனையே விரித்துக்கூறும்
தொல்காப்பியம் முதலிய நூல்களான் அறிந்து கொள்க என்றவாறு.