643, உவமையும் பொருளும் வேற்றுமை ஒழிவித்து
      ஒன்றுஎன மாட்டின்அஃது உருவகம் ஆகும்,

      நிறுத்த முறையானே உருவக அலங்காரம் கூறுவனவற்றுள் இஃது அதன்பொது
 இலக்கணம் கூறுகின்றது,

      இ-ள் :   உவமானப் பொருளையும் உவமேயப் பொருளையும் வேறுபாடு
 ஒழிவித்து ஒன்று என்பது ஓர் உணர்வு தோன்ற ஒற்றுமை கொளுத்தின், அது மேல்
 கூறிய உருவகம் என்னும் அலங்காரமாம் என்றவாறு,