648. முன்வரு சொல்லும் பொருளும் பலவயின்
      பின்னும் வரும்எனின் பின்வரு நிலையே.

     இது நிறுத்தமுறையானே பின்வருநிலை என்னும் அலங்காரம் கூறுகின்றது.

     இ-ள் : ஒரு செய்யுளுள் முன்னர் வந்த சொல்லே பின்னர்ப் பலஇடத்து வரினும்,
 முன்னர் வந்த பொருளே பின்னர் பல இடத்து வரினும் அது பின்வருநிலை என்னும்
 அலங்காரமாம் என்றவாறு.

     [இதனைச் சந்திராலோகமும் குவயானந்தமும் பின்வரு விளக்கணி என்று
 குறிப்பிடும்.