652. கூற்றினும் குறிப்பினும் ஒப்புடை இருபொருள்
     வேற்றுமைப் படவரின் வேற்றுமை; அதுவே
     குணம்பொருள் சாதி தொழிலொடு புணரும்.

     இது, நிறுத்த முறையானே வேற்றுமை என்னும் அலங்காரத்தின் பொது
 இலக்கணமும் அதன் திறனும் கூறுகின்றது.

29-30 

     இ-ள் : கூற்றினான் ஆதல் குறிப்பினான் ஆதல் ஒப்புமை உடையவாய்
 இருப்பன இரண்டுபொருள் தம்முள் வேறுபாடு தோன்ற வந்தால், அது வேற்றுமை
 என்னும் அலங்காரமாம்; அவ்வேறுபாடு குணம் முதலியவற்றால் கூடும் என்றவாறு.