இது நிறுத்தமுறையானே, அதிசய அலங்காலத்தின் பொது விதியும் அதன்விரியும்
கூறுகின்றது.
இ-ள் : கவியால் கருதப்பட்ட ஒரு பொருளது வனப்பு மிகுத்துச்
சொல்லுங்கால், உலகநடை இறவாத தன்மைத்துஆகி, உயர்ந்தோர் வியப்பத்
தோன்றுவது அதிசயம் என்னும் அவங்காரமாம். பொருள் அதிசயம்
முதலிய தெளிவுபெறத் தோன்றும் அறுகூற்று விரியினை உடைத்தாம்
அவ்வலங்காரம் என்றவாறு.
[இஃது உயர்வு நவிற்சியணி எனவும், மிகைமொழி எனவும்,
பெருக்கு எனவும் பெயர் பெறும்.]