இது நிறுத்தமுறையானே தற்குறிப்பேற்றம் என்னும் அலங்காரம் ஆமாறும் அதன்
ஒழிபும் கூறுகின்றது.
இ-ள் : இயங்குதிணையும் நிலைத்திணையும் ஆகிய இருகூற்றுப்
பொருளின்கண்ணும், இயல்பினான் நிகழும் தன்மை ஒழியக் கவி தன்னான் பிறிது
ஒன்றைக் கருதி, அவற்றுக்கண் ஏற்றிச் சொல்லுவது தற்குறிப்பேற்ற அலங்காரமாம்.
அவ்வலங்காரம் அன்ன போல் என்பன முதலிய உவமச்சொல் புணர்த்து விளங்கும்
தோற்றமும் உடைத்து என்றவாறு.
[இதனைத் தொன்னூல் விளக்கம் ஊகாஞ்சிதம் என்று குறிப்பிடும். வீரசோழியம்
நோக்கு என்னும்.