665. உள்நிகழ் தன்மை புறத்துத் தோன்ற
     எண்வகை மெய்ப்பாட்டின் இயல்வது சுவை ; அது
     வீரம்1 அச்சம்2 இழிப்பொடு3 வியப்பே4
     காமம்5 அவலம்6 உருத்திரம்7 நகை8 என
     இயம்பிப் போந்த இருநான்கு வகைத்தே.

     இது நிறுத்தமுறையானே சுவை என்னும் அலங்காரத்தினது இயல்பும் அதன்
 திறனும் கூறுகின்றது.

     இ-ள் :   உள்நிகழ்தன்மை புறத்துப் புலனாய் விளங்க எண்வகைப்பட்ட
 மெய்ப்பாட்டானும் இயல்வது சுவை என்னும் அலங்காரமாம். அது வீரம் முதலியவாகக்
 கூறிய உண்வகைத்தாம் என்றவாறு :

     "மெய்ப்பாட்டின் இயல்வது சுவையே" என்பது "பொன்னின் இயன்ற குடம்"
 என்றாற்போலக் கொள்க ; சுவை வேறு இன்மையின்.

     [பொன்னும் குடமும் அதுவாகுகிளவியான் ஒன்றாமாறு போல
 மெய்ப்பாடும் சுவையும் ஒன்றாகியனவே என்பது, இம்மெய்ப்பாடு அகத்திணையியலில்,