667. கருதியது கிளவாது அப்பொருள் தோன்றப்
      பிறிதுஒன்று கிளப்பது பரியா யம்மே.

     இது நிறுத்தமுறையானே பரியாய அலங்காரம் ஆமாறு கூறுகின்றது.

     இ-ள் :  தான் கருதியதனைக் கிளவாது அப்பொருள் தோன்றிப் பிறிது
 ஒன்றனைச் சொல்லுவது பரியாயம் என்னும் அலங்காரமாம் என்றவாறு.

     [இவ்வணி பிறிதின்நவிற்சி யணி எனவும் பெயர் பெறும்.]