669. வியத்தகு செல்வமும் மேம்பாம் உள்ளமும்
      உயர்ச்சி புனைந்து உரைப்பது உதாத்தம் ஆகும்.

     இது நிறுத்தமுறையானே உதாத்தம் அலங்காரம் ஆமாறு கூறுகின்றது.

     இ-ள் :  வியக்கத்தக்க செல்வத்தும் மேம்பட்ட உள்ளத்தும் உயர்ச்சியை
 மிகுத்துச் சொல்லுவது உதாத்தம் என்னும் அலங்காரமாம் என்றவாறு,