இது நிறுத்தமுறையானே விசேடம் என்னும் அலங்காரம் கூறுகின்றது.
இ-ள் : குணமும் தொழிலும் பொருளும் சாதியும் உறுப்பும் முதலாயின
குறைபடுதல் காரணமாக, ஒரு பொருட்கு மேம்பாடு தோன்ற உரைப்பது விசேடம்
என்னும் அலங்காரமாம் என்றவாறு.
[இது சிறப்பணி எனவும் சிறப்புநிலையணி எனவும் கூறப்பெறும்.
இது சந்திராலோகம், குவலயானந்தம் இவற்றில் சிறிது வேறுபாட்டுடன்
விளக்கப்பட்டுள்ளது; பிற்சேர்க்கை காண்க.