674. கருதிய குணத்தின் மிகுபொருள் உடன்வைத்து
     ஒருபொருள் உரைப்பது ஒப்புமைக் கூட்டம்;
     புகழினும் பழிப்பினும் புலப்படும் அதுவே.

     இது நிறுத்தமுறையாேனே ஒப்புமைக்கூட்ட அலங்காரத்தினது பொதுஇயல்பும்
 அதன் திறனும் கூறுகின்றது.

     இ-ள் :   ஒரு பொருளைச் சொல்லுமிடத்துத் தான் கருதிய
 குணம் முதலாயினவற்றான் மிக்கபொருளைக் கூட

 வைத்துச் சொல்லுவது ஒப்புமைக்கூட்டம் என்னும் அலங்காரமாம். அது
 புகழ்தற்கண்ணும் பழித்தற் கண்ணும் தோன்றும் என்றவாறு.

     [இஃது உடனிலைச் சொல்லணி எனவும் ஒப்புமைக் குழுவணி எனவும்
 கூறுப்பெறும்.