678. ஒருவகை நிகழ்வதற்கு ஒத்தபயன், பிறிதிற்குப்
     புகழ்மை தீமை என்றுஇவை புலப்பட
     நிகழ்வது ஆயின், நிதரிசனம் அதுவே.

     இது நிறுத்தமுறையானே நிதரிசன அலங்காரம் கூறுகின்றது.

     இ-ள் :   ஒருவகையான் நிகழ்வது ஒன்றற்குப் பொருந்திய பயனைப் பிறிது
 ஒன்றற்கு நன்மை புலப்பட நிகழ்வது ஆதல், தீமை புலப்பட நிகழ்வது ஆதல் செய்து,
 அதனைச் சொல்லுவது நிதரிசனம் என்னும் அலங்காரமாம் என்றவாறு.

     [இது சுட்டு எனவும் காட்சியணி எனவும் கூறப்பெறும்.