இது நிறுத்தமுறையானே புணர்நிலை அலங்காரம் கூறுகின்றது.
இ-ள் : வினையானும் பண்பானும் இரண்டு பொருளுக்கு ஒன்றே பொருந்தச்
சொல்வது புணர்நிலை என்னும் அலங்காரமாம் என்றவாறு,
ஒன்றே மொழிவது என்று ஒழியாது "புணர மொழி வது" என்ற மிகையானே,
இவ்வலங்காரம் ஒருவினை ஒடுச்சொல் பொருள்படவே வருதல் கொள்க.
[இவ்வணி ஒருங்கியல் எனவும், உடன் நிகழ்ச்சியணி எனவும், உடன் நவிற்சியணி
எனவும் கூறப்பெறும்.