இஃது ஓரெழுத்தானும் மடக்கு வரும் என அதன் வேறுபாடு
உணர்த்துதல் நுதலிற்று.
இ-ள்: எழுத்தின் கூட்டம் இடைபிறிது இன்றிச் சீரானும் அடியானும்
மடக்குதலே அன்றிப் பெயர்த்தும் வேறுபொருள் தரின் ஓர் எழுத்தான் மடக்குவதும்
அம் மடக்கிற்கு உரிமை உடைத்து என்று கூறுவர் ஆசிரியர் என்றவாறு.