இதுவும் அது.
இ-ள் : நியாயம் என்று சொல்லப்படுவது இலக்கண வகையான் கூறுங்கால்
காண்டல் முதலாகிய அளவைகளால் தெளிவித்து உரைக்கப்படும் பொருள்களது
முடிவின் கூறுபாடாம்; அவற்றை அவ்வவர் கூறியவாறு கூறாது மாறுபடக் கூறுவது
அதன் மலைவ என்று சொல்லுவர் புலவர் என்றவாறு.
அளவைகளால் தெளிவித்து உரைக்கப்படும் பொருள்களாவன அறுவகைப்பட்ட
சமயங்களின் முடிவாகிய பொருள்களின் தோற்றமும் நிலையும் அழிவும் இன்னவகைய
என்ற கூறதல்.