708. கூறிய நெறியின் அறுவகை மலைவும்
     நாடக வழக்கினுள் நாட்டுதற்க உரிய.

     இது மேற்கூறிய மலைவு ஆறனையும் இன்னுழி ஆம் என்கின்றது,

     இ-ள் : இடம் முதலாக ஆகமம் ஈறாக இங்ஙனம் கூறிய முறையமையான் வரும்
 அறுவகை மலைவும், நாடக வழக்கினிடத்துச் சொல்லுதற்கு உரியனவாம் என்றவாறு.

     ஈண்டு நாடக வழக்கு என்றது, இல்பொருளாய்ப் புகழ்ச்சியிடத்துப்
 புனைந்துரைவகையாற் கூறுதலாம் ; எனவே, அவ்வாறு புகழ்ச்சி இடத்து நீக்கப்படா
 அலங்காரமாயே வரும் என்பதாம்.