| முழுதும் - யா. வி. 55 | | | `பாலொடு தேன்கலந் தற்றே பணிமொழி வாலெயி றூறிய நீர்' | | | - குறள் 1121 - தூங்கிசைச் செப்பல் | | |
எனவும், |
| `கொல்லான், புலால் மறுத்தானைக் கைகூப்பி, எல்லா உயிரும் தொழும்' | | | - குறள் 240 - ஒழுகிசைச் செப்பல் | | |
எனவும் முறையே காண்க. இவ்வோசையைத் தூக்கு என்று ஓர் உறுப்பாக்கி மேல் கூறுவாரும் உளர். மேல் இவ்வாறு வருவனவற்றிற்கும் இவ்வுரை உய்த்து உரைக்க. |
| (19) |
விளக்கம் |
நிறுத்த முறை - 17 ஆம் நூற்பா. - தூக்காவது நிறுத்தலும் அறுத்தலும் பாடலும் என்று இன்னோரன்னவற்றுமேல் நிற்கும் வரையறையாம் (தொ. பொ. 339. பே) ஆசிரியப்பா ஓசையைச் செந்தூக்கு எனப் பதிற்றுப் பத்து கூறுகிறது. |
ஒத்த நூற்பாக்கள் |
|
என நிரைஅசைச் சீரானும் இறுதலே அன்றி உம்மையால், |
| `அகவல் என்பது ஆசிரி யம்மே.' | | | - தொ. பொ. 393 | | |
| `அஃதான் றென்ப வெண்பா யாப்பே.' | | | - தொ. பொ. 394 | | |
| `ஏந்திசைச் செப்பலும் தூங்கிசைச் செப்பலும் ஒழுகிசைச் செப்பலும் உண்ணும் வெண்பா செப்பல் ஓசை வெண்பா ஆகும்.' | | | - சங்கயாப்பு | | |
| `சிறந்துயர் செப்பல் இசையன ஆகி, மறைந்த உறுப்பின் அகறல் இன்றி, விளங்கக் கிடப்பது வெண்பா ஆகும்.' | | | - காக்கை | | |
| `சிந்தடி யானே இறுதலும், அவ்வடி அந்தம் அசைச்சீர் வருதலும், யாப்புற வந்தது வெள்ளை வழங்கியல் தானே.' | | | - காக்கை | | |