180

இலக்கண விளக்கம் - பொருளதிகாரம்

 
 

எனவாங்கு,

 
 

[தனிச்சொல்]

 
  `வெள்ளருக்கும் கரும்பாம்பும் பொன்மத்தும் மிலைச்சிஎமது
உள்ளிருக்கும் பெருமான் ! நின் திருமார்பில் உறஅழுத்தும்
கள்ளிருக்கும் குழலுமையாள் முலைச்சுவட்டைக் கடுவொடுங்கும்
முள்ளெயிற்றுக் கறைஅரவம் முழைஎன்று நுழையுமால்.ழு

                     அதாஅன்று

 
 

[தனிச்சொல்]

 
  `சிலைக்கோடு பொருமருப்பின் புகர்முகன்நின், நின்திருமார்பில்
முலைக்கோடு பொருசுவட்டைக் கண்டு,நின் முடிவுத்தோள்
மலைக்கோடி விளையாடும் பருவத்து, மற்றுத்தன்
கொலைக்கோடு பட்டவெனக் குலைந்துமனம் கலங்குமால்.ழு

                     அதாஅன்று
 
 

[தனிச்சொல்]

 
  `விடமார்ந்த சுடரிலைவேல் விடலை,நின் மணிமார்பில்
வடமார்ந்த முலைச்சுவட்டைக் கண்டு,தன் மருப்பெந்தை
தடமார்பம் விடர்செய்யச் சமர்செய்தான் கொல்என்று,
கடமார்வெங் கவுள்சிறுகண் கயாசுரனை வியக்குமால்.ழு

                     அதனால்
 
 

 [தனிச்சொல்]

 
  `சிலைமுகங் கோட்டுமச் சில்லரித் தடங்கண்
முறைமுகம் கோட்டினள், நகுமால்;
மலைமுகம் கோட்டுநின் மற்புயம் மறைந்தே,ழு
 
 

[சுரிதகம்]
 - 66

 

பஃறாழிசைக் கொச்சகக் கலிப்பாவிற்குச் செய்யுள் :

  `ஒருநோக்கம் பகல்செய்ய, ஒருநோக்கம் இருள்செய்ய,
இருநோக்கில் தொழில்செய்தும், துயில்செய்தும் இளைத்துயிர்கள்
கருநோக்கா வகைகருணைக் கண்ணோக்கம் செயுஞானத்
திருநோக்க அருள்நோக்கம் இருநோக்கும் செயச்செய்து,
மருநோக்கும் பொழில்தில்லை மணிமன்றுள் நடஞ்செய்வோய்.ழு
 
 

[தரவு]