செய்யுளியல் - நூற்பா எண் 42, 43

267

 
  `பொருளோ டடிமுதல் நிற்பது கூன், அது வேபொருந்தி
இருள்சேர் விலாவஞ்சி ஈற்றினும் நிற்கும்.'
 
 

 - யா. கா. 45

 
  `பாமுதல் நிற்பதுகூன், வஞ்சியீற்றினும் பாதத்துள்ளும்.'  
 

- வீ. சோ. 120

 
  `அடிமுதற் கட்பாப் பொருளைத் தழுவி
தனியே நிற்பது கூனாம்; அக்கூன்
வஞ்சியுள் இடைகடை முதலினும் வருமே.'
 
 

 - மு. வீ. யா. ஒ. 21

 
வகையுளி ஆமாறு 42
752. அசையும் சீரும் அடியும் எல்லாம்
இசைய வருபொருள் இயைபு நோக்காது
ஓசையே குறிக்கொண்டு ஒடுங்கவும் விரியவும்
அலகிடல், வகையுளி ஆகும் என்ப.
 
 

 - மு. வீ. யா. ஒ. 21

 
இது வகையுளி ஆமாறு கூறுகின்றது.

     இ-ள் : அசையும் சீரும் அடியும் ஆகிய எல்லாவற்றின்கண்ணும் பொருந்த
வருகின்ற பொருள் இயைபைக் குறியாது ஓசையினையே குறித்துக் கூம்பவும் கூம்பாது
அலரவும் அலகிட்டு, வண்ணம் அறுத்தல் வகையுளியாம் என்று கூறுவர் ஆசிரியர்
என்றவாறு.

     வரலாறு :
  `கடியார்பூங் கோதை கடாயினான், திண்தேர்
சிறியார்தஞ் சிற்றில் சிதைத்து.'
 
 

 - யா. கா. 45 மே.

 
இதனுள், கடியார் என்றும் பூங்கோதை என்றும் கடாயினான் என்றும் இவ்வாறு அலகிட
ஆசிரியத்தளையும் கலித்தளையும் தட்டுச்செப்பல் ஓசை சிதைதலின் கடியார்பூ என்றும்
கோதை என்றும் அலகிட ஓசை சிதையாதாம்.