|
[இப்பாடலில் அடுக்கல், எழிலி, கார், ஓங்கல், கலுழி வல்லியம் முதலிய திரிசொல் பல பயின்றுள்ளமை காண்க.] |
| `செறிதொடி! உவகை கேளாய்! செஞ்சுடர்த் தெறுகதிர்ச் செல்வன்' | | | | | |
என்பதூஉம் இராமாயணம் பாரதம் போல்வனவும் ஆகிய தொன்மையும், |
| `பாயிரும் பரப்பகம் புதையப் பாம்பின் ஆயிரம் மணிவிளக்கு அழலும் சேக்கைத் துளிதரு வெள்ளம் துயில்புடை பெயர்க்கும் ஒளியோன் காஞ்சி எளிதெனக் கூறின், இம்மை இல்லை; மறுமை இல்லை; நன்மை இல்லை; தீமை இல்லை; செய்வோர் இல்லை; செய்பொருள் இல்லை; அறிவோர் யார்அஃது இறுவுழி இறுகென' | | | - யா. கா. 45 மே. | | |
[இது மார்க்கண்டேயனார் காஞ்சி] |
என இழும் என்மொழியால் விழுமிது நுவன்ற தோலும், |
| `திருமழை தலைஇய இருள்நிற விசும்பின்' | | | | | |
என்ற மலைபடுகடாம் ஆகிய பாடல்போலப் பரந்த மொழியான் அடி நிமிர்ந்து ஒழுகிய தோலும், |
| `பார்க்கடல் முகந்த பருவக் கொண்மூ வார்ச்செறி முரசின் முழங்கி ஒன்னார் மலைமுற் றின்றே; வயங்குதுளி சிதறிச் சென்றவள் திருமுகம் காணக் கடுந்தேர் இன்றுபுகக் கடவுமதி, பாக, உதுக்காண், மாவொடு புணர்ந்த மாஅல் போஒல், இரும்பிடி உழையது ஆகப் பெருங்காடு மடுத்த காமர் களிறே' | | | - யா. கா. 45 மே. | | |
எனப் புலனும், |