306

இலக்கண விளக்கம் - பொருளதிகாரம்

 

விளக்கம்

     உரை நூல் முதலியவற்றின் விளக்கத்தைப் பாட்டியலில் காண்க. (நூற்பா எண்
143-147) இவை வெண்பா முதலியன போல அடிவரையறை இல்லாத அறுவகைச்
செய்யுட்கள் என்பது உணர்க.

ஒத்த நூற்பாக்கள்

  `எழுநிலத் தெழுந்த செய்யுள் தெரியின்
அடிவரை இல்லன ஆறென மொழிப.'
 
 

- தொ. பொ. 476

 
  `அவைதாம்,
நூலி னான, உரையி னான,
நொடியொடு புணர்ந்த பிசியி னான,
ஏது நுதலிய முதுமொழி யான,
மறைமொழி கிளந்த மந்திரத் தான,
கூற்றிடை வைத்த குறிப்பி னான.'
 
 

 - தொ. பொ. 477

 
  `உரையொடு நூலிவை அடியில நடப்பினும்
வரைவில என்ப வாய்மொழிப் புலவர்.'
 
 

- பல்காயம்

 
  `மொழிபிசி முதுசொல் மூன்று மன்ன.'  
 

- பல்காயம்

 
  `உரையும் நூலும் அடியின்றி நடப்பினும்
வரைவில என்ப வயங்கி யோரே.'
 
 

- பல்காயம்

 
  `வாய்மொழி பிசியே முதுசொல் என்றாங்கு
ஆமுறை மூன்றும் அன்ன என்ப.'
 
 

- பல்காயம்

 
  `செயிர்தீர் செய்யுள் தெரியுங் காலை
அடியின் நீட்டத் தழகுபட் டியலும்.'
 
 

- பல்காயம்

 
  `ஓரடி யானும் ஒரோவிடத் தியலும்.'  
 

- பல்காயம்

 
  `அவைதாம்,
பாட்டுரை நூலே மந்திரம் பிசியே
முதுசொல் அங்கதம் வாழ்த்தொடு பிறவும்
ஆக்கின என்ப அறிந்திசி னோரே.'
 
 

- பல்காயம்

 
  `பத்தியம் என்ப பாவொடு பாவினம்;
கத்தியம் அவைபோல் கலையல் லனவே.'
 
 

- தொ. வி. 250

 

51