|
நிரை அசை நான்கற்கும் உதாரணம்; | |
| `அணிநிழல் அசோகமர்ந் தருள்நெறி நடாத்திய மணிதிகழ் அவிழ்ஒளி வரதனைப் பணிபவர் பவம்நனி பரிசறுப் பவரே' | | | - யா. கா. 5 மே. | | |
எனவும் வரும். |
| `தனிநிலை ஒற்றுஇவை தாம்அலகு இலவே அளபெடை அல்லாக் காலை ஆன' | | | - யா. வி. 3 | | |
என்ப ஆகலின், நேர் அசை ஓர் அலகும் நிரை அசை இரண்டு அலகும் பெறும் என்பதூஉம் பெற்றாம். |
| 5 |
விளக்கம் |
முற்கூறிய - சென்ற நூற்பாவில் கூறிய. நேர் அசை நான்கு - 1. நெடில் - ஆ - போ 2. குறில் - ழி - து 3. நெடில் + ஒற்று - வேல் - சாந்   4. குறில் + ஒற்று - வெள் - தம் நிரை அசை நான்கு - 2 குறில் - வெறி - அணி குறில் + நெடில் - சுறா - அசோ 2 குறில் + ஒற்று - நிறம் - திகழ் குறில் + நெடில் + ஒற்று - விளாம் - நடாத் நேரசையில் ஒற்று நீங்கலாக ஓர் எழுத்தும் நிரையசையில் ஒற்று நீங்கலாக இரண்டு எழுத்தும் காணப்படுமாறு நோக்குக. |
ஒத்த நூற்பாக்கள் |
| `குறிலே நெடிலே குறில்இணை குறில்நெடில் ஒற்றொடு வருதலொடு மெய்ப்பட நாடி நேரும் நிரையும் என்றிசின் பெயரே.' | | | - தொ. பொ. 315 | | |