66

இலக்கண விளக்கம் - பொருளதிகாரம்

 

 

கொங்கவிர் அசோகின் குளிர்நிழற்கீழ்ச்
செழுநீர்பவளத் திரள்காம்பின்
முழுமதிபுரையும் முக்குடைநீழல்
வெங்கண்வினைப்பகை விளிவெய்தப்
பொன்புனைநெடுமதில் புடைவளைப்ப
அநந்தசதுட்டயம் அவைஎய்த
நனந்தலைஉலகுடன் நவைநீங்க
மந்தமாருதம் மருங்கசைப்ப
அந்தரதுந்துபி நின்றியம்ப
விலங்குசாமரை எழுந்தலமர
நலங்கிளர்பூமழை நனிசொரிதர
இனிதிருந்து
அருள்நெறி நடாத்திய ஆதிதன்
திருவடி பரவுதும்; சித்திபெறல் பொருட்டே'
 
 

- யா. கா. 9 மே.

 
எனவும்,

[நாலசைச் சீர்கள் மூவகைச் சீர்கள் போல இறுதி அசை பற்றிக் கொள்ளப்படல்
வேண்டும் - பூவைக் காயாகவும் நிழலைக் கனியாகவும் கொள்ளல்வேண்டும்.]
 
     நிரை அசைச்சீர் இயற்சீரே போல நின்று வருஞ்சீர் முதல்
அசையோடு ஒன்றாமையின் இயற்சீர் வெண்டளையாயும் நேர் அசைச்சீர்
இயற்சீரே போல நின்று வருஞ்சீர் முதல் அசையோடு ஒன்றினமையின்
ஆசிரியத்தளையாயும் வந்த செய்யுள் :
  `உரிமை யின்கண் இன்மையால்
அரிமதர் மழைக் கண்ணா
செருமதி செய் தீமையால்
பெருமை கொன்ற என்பவே'
 
 

- யா. கா. 11 மே.

 
எனவும் வரும். பிறவும் அன்ன. (9)
[அசைச்சீருள் நேர்அசைகள் தேமாஞ்சீர் போலவும் நிரை அசைகள் கருவிளஞ்சீர்
போலவும் கொள்ளப்படும். மழை, நிரை; செய் - நேர்.]