செய்யுளியல் - நூற்பா எண் 14

87

 
     சிறிய பெரிய நிகர்மலர்க் கோதைதன் - கூழை
     வெள்வளைத் தோளும் சேயரிக் கருங்கணும் - மேற்கதுவாய்
     இருக்கையும் நிலையும் ஏந்துஎழில் இயக்கமும் - கீழ்க்கதுவாய்
     துவர்வாய்த் தீஞ்சொலும் உவந்துஎனை முனியாது - முற்று
     என்றும் இன்னணம் ஆகுமதி,    
     பொன்திகழ் நெடுவேல் போர்வல் லோயே!' - யா. கா. 20 மே.
எனவும்,

இணை இயைபு முதலிய இயைபு விகற்பம் ஏழும் வந்த செய்யுள் :

     `மொய்த்துடன் தவழும் முகிலே பொழிலே - இணை
     மற்றதன் அயலே முத்துறழ் மணலே - பொழிப்பு
     நிழலே இனிஅதன் அயலது கடலே - ஒரூஉ
     மாதர் நகிலே வல்லே இயலே - கூழை
     வில்லே நுதலே வேற்கண் கயலே - மேற்கதுவாய்
     பல்லே தளவம் பாலே சொல்லே - கீழ்க்கதுவாய்
     புயலே குழலே மயிலே இயலே
                       அதனால்
- முற்று
     இவ்வயின் இவ்வுரு இயங்கலின்    
     எவ்வயி னோரும் இழப்பர்தம் நிறையே' - யா. கா. 20 மே.
எனவும்,

இணை அளபெடை முதலிய அளபெடை விகற்பம் ஏழும் வந்த செய்யுள்:

     `தாஅட் டாஅ மரைமலர் உழக்கிப் - இணை
     பூஉக் குவளைப் போஒ தருந்திக் - பொழிப்பு
     காஅய்ச் செந்நெல் கறித்துப் போஒய் - ஒரூஉ
     மாஅத் தாஅள் மோஒட் டெருமை - கூழை
     தீஇம் புனலிடைச் சோஒர் பாஅல் - மேற்கதுவாய்
     மீஇன் ஆஅர்ந்து உகளும் சீஇர் - கீழ்க்கதுவாய்
     ஆஅ னாஅ நீஇள் நீஇர் - முற்று
     ஊரன் செய்த கேண்மை    
     ஆய்வளைத் தோளிக்கு அலர்ஆ னாதே' - யா. கா. 20 மே.
எனவும் வரும். பிறவும் அன்ன.