செய்யுளியல் - நூற்பா எண் 14

89

 
     `அடிமுதல் ஓரெழுத்து அடிமுதல் தொடையே.'    
     `முதலெழுத்து ஒன்றி முடிவது மோனை.'    
     `ஏனையது ஒன்றின் எதுகைத் தொடையே.'    
     `முதலெழுத்து அளவொத்து அயலெழுத்து ஒன்றுவது    
     எதுகை அதன்வழி இயையவும் பெறுமே.'
 
- பல்காயம்
     `முதலெழுத்து ஒன்றுவ; மோனை எதுகை    
     முதலெழுத்து அளவோடு ஒத்தது முதலா    
     அதுஒழித்து ஒன்றின் ஆகும் என்ப.'
 
- பல்காயம்
     `ஆதி எழுத்தே அடிதொறும் வரின்அடி    
     மோனைத் தொடையென மொழிமனார் புலவர்.' - யா. வி. 35
     `இரண்டாம் எழுத்தொன்று இயைவதே எதுகை.' - யா. வி. 36
     `மொழியினும் பொருளினும் முரணுதல் முரணே.'   யா. வி. 38
     `இறுவாய் ஒப்பின்அஃது இயைபு எனப்படுமே.'   யா. வி. 40
     `அளபெடை ஒன்றுவது அளபெடைத் தொடையே.'   யா. வி. 41
     `சொல்லினும் பொருளினும் மாறுகோள் முரணே.' - பல்காயம்
     `பொருளினும் மொழியினும் முரணுதல் முரணே.' - நத்தத்தம்
     `பொருளினும் சொல்லினும் முரணத்தொடுப்பின்,    
     முரண்என மொழிப முந்தை யோரே.' - மயேச்சுரம்
     `மறுதலை உரைப்பினும் பகைத்தொடை ஆகும்.' - அவிநயம்
     `மொழியினும் பொருளினும் முரணத் தொடுப்பின்,    
     இரணத் தொடையென்று எய்தும் பெயரே.' - காக்கை
     `இறுவாய் ஒப்பினஃது இயைபுஎன மொழிப.' - அவிநயம்
     `இயைபே இறுசீர் ஒன்றும் என்ப.' - பல்காயம்
     `இறுசீர் ஒன்றின் இயைபெனப் படுமே.' - நத்தத்தம்
     `அளபெடைத் தொடைக்கே அளபெடை ஆகும்.' - பல்காயம்
     `அளபெடைத் தொடைக்கே அளபெடை ஒன்றும்.' - நத்தத்தம்