பாட்டியல் - நூற்பா எண் 11, 12
|
101
|
‘எடுத்த முதல்மொழி ஈறுதிரிந்து ஒன்றலும்
வகுத்த அச்சீர் வகையுளி சேர்தலும்
பொதுப்பட மொழிதலும் பொருட்புலன் இன்மையும்
சிறப்பொடு படாமையும் சிறுபெயர் பிளத்தலும்
அறத்துள் வழீஇய ஆனந் தம்மே’
- பன். பாட்.
‘வகையுளி சேர்தல் வனப்பின்றாய் நிற்றல்
தொகையார் பொருள்பலவாத் தோன்றல் - தகையில்
பொருள்இன்மை ஈறு திரிதலே போல்வ
தருமுதற்சீர்ச் சொற்காகும் தப்பு.’
- வெண். பாட். 3
‘பொருள்தெரியாமை, சிறப்பின்றி நிற்றல், பொருள்பலவாய்
வருமொழிஆதல், வகையுளி சேர்தல், வருஞ்சீருடன்
திரிதரும் ஈறுஉடைத்தாதல், எடுத்தஅச்சீர்ச் செய்யுமேல்
சரிவளையாய்! அதுதான் அமையாதுஎன்று சாற்றுவரே.’
- நவ. 4
‘நாமவகை யுளிசேர்தல், பொருளது இன்மை,
நலமிலதாய் வைத்தல், பல பொருளாய்த் தோன்றல்,
ஆம்இனிய சொல்ஈறு திரிதல், போலும்
ஆதிமொழிக்கு ஆகாஆ னந்தம் ஆமே.’
- சிதம். பாட். 18
‘சொல்லின் பொருத்தம் சொல்லுங் காலை
அரிதுணர் சொல்லும் அருந்திரி சொல்லும்
திரிபுடைச் சீரும் தீதாம் முதற்கே.’
- தொ. வி. 286
‘சீர்நனி திரிதல், சிறப்பின்றாய் நிற்றல்,
ஈறு திரிதல், இரும்பொருள் இன்மை,
பலபொருள் பயத்தல், முதலிய பிறவும்
முதற்சீர் மொழிக்குஆ காவென மொழிப.’
- மு. வீ. யா. 67
12
|