New Page 1

பாட்டியல் - நூற்பா எண் 14, 15

105


    

   

    ‘மால்அயன் சேய்அரன் கண்டனமா மறையோர்க்கு’

                                          - நவ. 12

 

    ‘தீதுஇல்உயிர் ஈராறும் முதல்ஒற்று ஆறும்

         திருமறை யோர்க்கு அடைவே.’        

- சித. பாட். 21

 

    ‘வரும்உயிர் அடங்கலும் வல்லினப் புள்ளியும்

    அந்த ணர்க்காம்.’                  

- மு. வீ. யா. ஒ. 71

                                                    14

 

அரசர் வருணம்

 

775. தநபம யரஎனச் சாற்றிய ஆறும்

   மனம்மகிழ் அரசர் வருணம் ஆகும்.

 

இஃது அரசர் வருணம் கூறுகின்றது.

 

    இ - ள்: த ந ப ம ய ர என்னும் ஆறும் அரசர்க்கு உரிய
 என்றவாறு.                                           

 15

 

ஒத்த நூற்பாக்கள்

 

    ‘துன்னருஞ் சிறப்பின் மன்னவர் சாதி

    தநவும் பமவும் யரவும் ஆகும்.’            

- பன். பாட். 8

 

    ‘அடைவே ஓர்ஆறும் அரசர்க்காம் என்பர்

    படையாத சாதிகளின் பண்பு.’         

- வெண். பாட். 10

 

    ‘காலயன் (சூரியன்) இந்திரன் சந்திரன் கண்டன

                            காவலர்க்கு.’         

- நவ. 12

 

     ‘அடைவே ஓர்ஆறு வேந்தர்க்கு.’           

 - சித. பாட். 21

 

     ‘தந யர பமப் புள்ளி மன்னவர்க்காம்.’

                                  - மு. வீ. யா. ஒ. 72