New Page 1
பாட்டியல் - நூற்பா எண் 17, 18

107


 

ஒத்த நூற்பாக்கள்

 

     ஏத்திய மரபின் சூத்திரர் சாதி

     ழகரமும் ளகரமும் ஆகும் என்ப.’                           

- பன். பாட். 13

 

     ‘பண்பாவும் சூத்திரர்க்காம் மற்றையவை.’

                                                         

- வெண். பாட். 11

 

     ‘வேலையன் (வருணன்) கண்டன வேளாளருக்கு

                                           விலக்கல்லவே.’          

- நவ. 12

 

     ‘மற்றை, எழுத்துளவை சூத்திரர்க்காம் இயன்றசாதி.’

                                                           

 - சித. பாட். 21

 

     ‘வருணப் பொருத்தமே வரும்உயிர் அடங்கலும்

     கம்முதல் ஆறும் கைசிகர்க்கு ஆகும்;

     தம்முதல் ஆறும் தகும்மன் னவர்க்கே;

     லவறன வணிகர்க்காம்; ழளச் சூத்திரர்க்கே;

     இம்முறை நஞ்செழுத்து இயலினும் இழுக்கா.’

                                                              

 - தொ. வி. 291

 

    ‘பின்னவர் காம் ழள பேசுங்காலே.’                        

- மு. வீ. யா. ஒ. 72

                                                                        17

 

எழுத்துக்களைப் படைத்த இறைவர்

 

778. பன்னீ ருயிரும் முன்அயன் படைத்தனன்;

    மன்னிய அரன்அரி மயிலோன் புனிதன்

    ஞாயிறு திங்கள் நடுவன் வருணன்

    ஏயும் நிதிக்கோன் இரண்டுஇரண்டு ஆகப்

    படைத்தனர் ஈரொன் பான்ஒற் றையுமே.

 

இது மேற்கூறிய உயிர் ஒற்றுக்களுக்கு எய்தாதது எய்துவிக்கின்றது.

 

    இ - ள்: பன்னிரண்டு உயிர்களையும் பிரமன் உண்டாக்கினன். பதினெட்டு
மெய்யினையும் இரண்டு