New Page 1

பாட்டியல் - நூற்பா எண் 18, 19

109


    

     ‘மக்கட்சாதி நான்கிற்கும் வகுத்த

     தத்தம் சாதி எழுத்தே அவரவர்க்கு

     வைத்துமுன் எடுப்பின்அது மாண்பு உடைத்தே;

     மயங்கினும் வரையார் பயன்பட வரினே.’                      

 - பன். பாட். 18

 

     ‘அரன்அரிசேய் மால்கதிர்கூற் றாய்மழைபொன் மெய்க்கும்

     பிரமன் படைப்புயிர்க்கும் பேசு.’                           

- வெண். பாட். 11

 

     ‘ஓதிமன்றன் படைப்புயிரே ; அரன்மால் செவ்வேள்

     உம்பர்கோன் பரிதிமதி மறலி நீர்க்கோன்

     காதல்அள கேசன்முதல் இவ்விரண்டாய்க்

     கம்முதல்மூ வாறொற்றும் கருதிச் செய்தார்.’                  

  - சித. பாட். 21

                                                                    18

அமுத எழுத்து

 

779. கசதப நமவ ஏழொடும் அகரம்

    இகரம் உகரம் எகரம் நான்கும்

    அமுத எழுத்தென்று அறைந்தனர் புலவர்.

 

இது நிறுத்த முறையானே உண்டி கூறுவனவற்றுள் அமுத உண்டி இவை என்கின்றது.

 

     இ - ள்: க ச த ப ந ம வ என்னும் ஏழொடும் அகரமும் இகரமும் உகரமும் எகரமும் என்னும் நான்கு உயிரும் முன்மொழிக்கு ஆம் அமுத எழுத்துக்கள் என்று கூறினர் புலவர்என்றவாறு.                  

    (19) 

ஒத்த நூற்பாக்கள்

 

     ‘அமுதென விடமென வரும்இரு வகையும்

     உணவுஎனப் புலவர் உரைத்தனர் உளரே.’

                                                     - பன். பாட். 31

 

     ‘நஞ்சென அமுதென நவிலவும் படுமே.’                       ’’   32