116
|
இலக்கண விளக்கம் - பொருளதிகாரம்
|
‘நட்புஅரண் எதிபகை மரணம் ஐந்தனுள்
ஒப்புடைக் குறிக்கோள் ஒருமூன்று ஆகும்.’
என்றார் மாமூலர்.
(23)
விளக்கம்
அ ஆ, இ ஈ ஐ, உ ஊ ஒள, எ ஏ, ஒ ஓ என்பன இனங்களாம்.
தலைவன் இயற்பெயர் முதலெழுத்து அ ஆ வருக்கத்தினது ஆயின் அ ஆ,
இ ஈ ஐ, உ ஊ ஒள என்பனவற்றுள் ஒன்று முதலாகிய முதற்சீரே ஏற்றது.
தலைவன் இயற்பெயர் முதலெழுத்து இ ஈ ஐ வருக்கத்தினது ஆயின்
இ ஈ ஐ, உ ஊ ஒள, எ ஏ என்பனவற்றுள் ஒன்று முதலாகிய முதற்சீரே
ஏற்றது.
தலைவன் இயற்பெயர் முதலெழுத்து உ ஊ ஒள என்பனவற்றுள்
ஒன்றுஆயின், உ ஊ ஒள, எ ஏ, ஒ ஓ என்பனவற்றுள் ஒன்று முதலாகிய
முதற்சீரே ஏற்றது.
தலைவன் இயற்பெயர் முதல் எழுத்து எ ஏ என்பனவற்றுள்
ஒன்றாயின், எ ஏ, ஒ ஓ, அ ஆ என்பனவற்றுள் ஒன்று முதலாகிய
முதற்சீரே ஏற்றது.
தலைவன் இயற்பெயர் முதல் எழுத்து ஒ ஓ என்பனவற்றுள்
ஒன்றாயின் ஒ ஓ, அ ஆ, இ ஈ என்பனவற்றுள் ஒன்று முதலாகிய
முதற்சீரே ஏற்றது.
அ ஆ இயற்பெயர் முதலெழுத்தாயின் அ ஆ பாலப் பொருத்தம்; இ
ஈ ஐ குமாரப்பொருத்தம்; உ ஊ ஒள இராசப் பொருத்தம்; எ ஏ
விருத்தப்பொருத்தம்; ஒ ஓ மரணப் பொருத்தமாம்.
பிறவும் இவ்வாறே இயைத்துக் காண்க. விருத்தப் பொருத்தமும்
மரணப்பொருத்தமும் கொள்ளத்தக்கன அல்ல. பால குமார ராச விருத்த
மரணப் பொருத்தங்கள் மாமூலனாரால் முறையே நட்பு அரண் எதி பகை
மரணம் எனப் பெயரிடப்பட்டன.
|