பாட்டியல் - நூற்பா எண் 23

117


 

ஒத்த நூற்பாக்கள்

 

‘குறில்ஐந் துடன்நெடில் கூட்டி நின்ற

 ஐ ஒள இரண்டும் இஉ அடக்கிப்

 பால குமார அரசு மூப்பு

 மரணம்என்று ஐவகைத் தானம் வகுத்தனர்.’

 - பன். பாட். 54

‘முன்பின் செய்யுள் முதலெழுத்து அதற்குப்

 பொருத்தமும் விருத்தமும் பகையும் கொளலே.’   

’’     55

‘நட்பே உதாசீ னம்பகை என்னும்

 ஓப்புடைக் குறிப்பின் ஒருமூன்று ஆகும்.’

’’     56

‘பால குமார அரச என்னும்

 மூவகைத் தானமும் நட்புஎனப் படுமே.’       

’’     57

‘ஒழிந்த இரண்டும்உதாசீனம்பகை.’  

’’     58

‘பாட்டுடைத் தலைவன் இயற்பெயர் முன்னெழுத்துப்

 பால னாக நால்வகை எழுத்தும்

 வட்டமாய் முறைமையின் இயலும் என்ப.’       

’’     59

‘பெயர்முதல் எழுத்துப் பால னாக

 நால்வகை எழுத்தினும் வட்ட மாக

 முறையே நட்புஉதா சீனம் பகைவரும்.’

- பன். பாட். 60

‘அகரம் தனக்காய நட்பென்று உரைப்பர

 இகர உகரங்கள் தாம்.’            

’’     61

‘அகரக்கு எகரம் உதாசீனம் ஆகும்;

 அகரக்கு ஒகரம் பகை.’               

’’     62

‘உகரம் எகரம் எனஇரண்டும் என்ப

 இகரம் தனக்காய நட்பு.’         

’’     63

‘இகரக்கு ஒகரம் உதாசீனம் ஆகும்;

 இகரக்கு அகரம் பகை.’               

’’     64