118                      இலக

118                  

இலக்கண விளக்கம் - பொருளதிகாரம்


    

     ‘உகர எழுத்துக்கு நட்பாய் வருமே

     எகர ஓகரங்கள் தாம்.’                                           

 

’’    65

 

     ‘உகரக்கு அகரம் உதாசீனம் என்ப;

     உகரக்கு இகரம் பகை.’                                           ’’    66

 

     ‘எகரக்கு ஒகரம் அகரம் நட்பாகும்;

     இகரம் உதாசீனம் ஆம்.’                                       

 

’’    67

 

     ‘எகரம் தனக்குப் பகைஎன்று உரைப்பது

     உகர எழுத்தென்று உணர்.’                                     

 

’’    68

 

     ‘ஒகர எழுத்துக்கு அகர எழுத்தும்

     இகர எழுத்தும்நட் பாம்.’                                       

 

’’    69

 

     ‘ஒகரக்கு உகரம் உதாசீனம் ஆகும்;         

     எகரம் பகையாம் எனல்.’                                       

 

’’    70

 

     ‘நட்புப் பகையாம் பகையும்நட் பாம்அவை

     வைத்த முறையே கொளல்.’                                     

 

’’    71

 

     ‘உய்த்துணர்ந்து நாடில் உயிர்மெய்க்கும் இவ்வகையே

     வைத்துணர்ந்து கொள்க வகுத்து.’                                

 

’’    72

 

     ‘குறில்ஐந்தும் தம்நெடில்கொண்(டு) இஉஐ ஒளசேர்ந்(து)

     அறிபாலன் ஆதியா ஐந்தும் - இறைவன்பேர்

     முன்எழுத்துப் பாலனில் வைத்(து) எண்ணிமூப் பேமரணம்

     என்னுமிவை தீதென்றே எண்.’                             

 

 - வெண். பாட். 6

 

     ‘குறில்ஐந்தும் தம்நெடில் கூட்டி இஉஐஒள கொண்டு அடைவே

     முறைமையின் பாலன்குமாரன் அரசன் மூப்பே மரணம்

     இறையென ஏத்துமவன்பெயர் பாலனா எண்ணிவந்த

     நெறிமையின் மூப்பும் மரணமும் பாட்டிடை நீக்கினவே.’

                                                                   - நவ. 6