பாட்டியல் - நூற்பா எண் 23
|
119 |
‘அஆ இஈ ஐயும் உஊ
ஒளவும் எஏ ஒஓ என்றிவை
பாலன் குமாரன் இராசன்
மூப்பு
மரணம் முறையே ஐந்தும்
எண்ணுக;
மூப்பும் மரணமும் முதற்சீர்க்கு
ஆகா.’
- வெ. பா. மேற். மு. வீ. யா. ஒ. 69
‘ஊனமிலா அஆவும்
இஈஐயும்,
உஊவும் எஏயும்
ஒஓ ஒளவும்
தானமிதுஐ வகையாம்அந்
தாதிதன்னில்,
தலைவன்பேர்
முதலெழுத்தில் பாலனாதி
மேல்நிரை எண்ணிற்பால
குமாரராச வேண்டிடும்
வேண்டா
விருத்த மரணந்தானே.’
- சித. பாட்.
19
‘தானமே,
குறில்நெடில் தம்முள்
இணைந்துஇ உவ்வுடன்
ஐஒளவும் சேர்புழி
ஐந்தாம்; அவற்றுள்
தலைமகன் இயற்பெயர்
தானம் முதலாப்
பாலன் குமரன் இராசன்
மூப்பு
மரணம்முறை எண்ணி
வரும்முதல் எழுத்தின்
தானம்ஈற்று இரண்டெனின்
தவிர்க என்ப.’
- தொ. வி. 288
23
எழுத்துப் பொருத்தம்
784. எண்ணின் மூன்றுஐந்து
ஏழ்ஒன் பான்முதல்
நண்ணும் அக்கரம்;
நாலுஆறு எட்டுஉறா.
இஃது எழுத்துப் பொருத்தம்
ஆமாறு கூறுகின்றது.
இ - ள்: முதற்சீர் எழுத்தினை
எண்ணுமிடத்து வியனிலை ஆகிய மூன்றெழுத்தும்
ஐந்தெழுத்தும் ஏழெழுத்தும் ஒன்பதெழுத்தும் பொருத்தம்
உடையனவாம்; சமனிலை ஆகிய நான்கெழுத்தும் ஆறெழுத்தும் எட்டெழுத்தும் பொருந்தா என்றவாறு.
|