124 |
இலக்கண
விளக்கம் - பொருளதிகாரம் |
‘பிறநூல் முடிந்தது தான் உடன்படுதல்’ என்னும் நியாய நூல்வழக்கால்
இறைவன் பெயர் நாட்கு மூன்றாம் பரியாயத்தின் நின்ற மூன்று ஐந்து ஏழ்
பொருத்தம் உடைய என்று கோடலும், சென்மநாள் தொடங்கிப் பொருத்தம்
கோடலும் கொள்க.
(36)
விளக்கம்
அ ஆ இ ஈ - கார்த்திகை; உ ஊ எ ஏ ஐ - பூராடம்; ஒ ஓ ஒள -
உத்திராடம்; க கா கி கீ - திருவோணம்; கு கூ - திருவாதிரை; கெ கே கை
- புனர்பூசம்; கொ கோ கௌ - பூசம்; ச சா சி சீ - ரேவதி; சு சூ செ சே
சை - அசுவினி; சொ சோ சௌ - பரணி; ஞா ஞி ஞெ ஞொ - அவிட்டம்;
த தா - சுவாதி; தி தீ து தூ தெ தே தை - விசாகம்; தொ தோ தௌ -
சதயம்; ந நா நி நீ நு நூ - அனுடம்; நெ நே நை - கேட்டை; நொ நோ
நௌ - பூரட்டாதி; ப பா பி பீ - உத்திரம்; பு பூ - அத்தம்; பெ பே பை
பொ போ பௌ - சித்திரை; ம மா மி மீ மு மூ - மகம்; மெ மே மை -
ஆயில்யம்; மொ மோ மௌ - பூரம்; யா - உத்திரட்டாதி; யூ யோ - மூலம்;
வ வா வி வீ - உரோகிணி; வெ வே வை வௌ - மிருகசீரிடம். என்று
பதினொரு நூற்பாக்களால் மொழிமுதலாகும் எழுத்துக்கட்கு நாட்பொருத்தம்
கூறப்பட்டது.
நாட்பொருத்தம் கொள்ளுமாறு.
தலைவன் இயற்பெயர் இராமன் எனக்கொள்வோம். அப்பெயரின்
முதலெழுத்து இகரம். அதற்குரிய நாள் கார்த்திகை. கார்த்திகையைத்
தொடங்கி நாள்கள் இருபத்தேழனையும் மூன்று கூறுகளாகக் கொண்டு
அவற்றிற்குச் சன்மம் அனுசன்மம் உபசன்மம் என்று பெயரிடல் வேண்டும்.
|