126                               இலக
126

இலக்கண விளக்கம் - பொருளதிகாரம்


                               

        இரேவதி பரணி உரோகணி என்பனவற்றிற்குரிய எழுத்துக்களுள்
ஒன்றனைப் பாட்டு முதற்சீர் முதல் எழுத்தாகக் கொள்ளுவாரும் உளர்
என்பதும் கொள்ளத்தகும். 

ஒத்த நூற்பாக்கள்

 

 'மொழிக்கு முதலா கியஎழுத்துக்கட்கு                    

 ஓதிய நாள்வகை இயற்றுதல் கடனே.'       

 'உயிர்முதல் நான்கும் செயிர்தபு கார்த்திகை;

 ஐந்தும் மூன்றும் அவற்றின் அடைவே

 வந்தபூ ராடம் உத்திரா டம்மே.'           

"

82

 'ககர வருக்க வகைநாள் விரிப்பின்

 நான்கும் இரண்டும் மூன்றும் மூன்றும்

 ஓணம் ஆதிரை புனர்பூசம் பூசம்.'      

"

83

 'சகரம் நான்குஐந்து ஒருமூன்று இவற்றின்

 வகைநாள் இரேவதி முதல்மூன்று என்ப.'    

"

84

   'ஞகர வருக்கத்து ஒருமூன்று அவிட்டம்.'     

"

85

 'தகர வருக்கத்து இரண்டுஏழ் மூன்றற்கு

 வகைநாள் சோதி விசாகம் சதயம்.'         

"

86

 'நகரத்து ஆறும் அனுடத்து அடைவே

 ஏனைஆறும் கேட்டைபூ ரட்டாதி.'  

"

87

 'பத்திய பகரத்து ஒருநான்கு இரண்டுஆறு

 உத்திரம் அத்தம் சித்திரை ஆகும்.'         

"

88

      ‘மகரத்து ஆறும் மூன்றும் மூன்றும்

 மகம்ஆ யில்யம் பூரம் ஆகும்.’      

"

89

 ‘யாவே உத்திரட் டாதி ; ஏனை

 யூயோ மூலம்என்று உணர்ந்திசி னோரே.’       

"

90

 ‘யூயோ இரண்டும் மேனாள் மூலம்;

  யாவே உத்திரட் டாதிநாள் பெறுமே.’   

"

91