128 |
இலக்கண
விளக்கம் - பொருளதிகாரம் |
‘பிரிந்த சகரத்து
நான்கைந்(து) பின்மூன்(று)
அறிந்த கலமுதல்
மூன்றாகும் - செறிந்த
ஞகரத் தொருமூன்றும்
நன்குணர்ந்தோர் ஆய்ந்த
புகர்தீர் அவிட்டமாம்
போற்று.’
’’
14
‘போற்றும் தகரம்இரண்
டேழ்மூன்றும் பொய்தீர்ந்தோர்
சாற்றுவர் சோதி
முறம் சதயம் - வேற்றனுடம்
கேட்டைபூ ரட்டாதி
கேள்நகரத் தோராறும்
வாட்டமிலா மும்மூன்றும்
வந்து.’
- வெண். பாட். 15
‘வந்த பகரத்து நான்கிரண்டா
றுத்திரந்தொட்(டு)
அந்தமிலா மூன்றாகும்
அவ்வடைவே - வந்ததற்பின்
ஆறுமகம் மூன்றுடன்மூன்(று)
ஆயிலியம் பூரமாம்
மாறில் மகரத்தின்
மாட்டு.’
- வெண். பாட். 16
‘மாட்டும் யகரத்துள்
யாவுத் திரட்டாதி
ஈட்டியயூ காரயோ
காரங்கள் - காட்டிய
மூலம் வகரத் தொருநான்கு
ரோகணியாம்
தோலாத நான்கெனவே
சொல்.’
- வெண். பாட். 17
‘சொல்லியநாள்
மூவொன்ப தாகத் துணிந்தொன்று
புல்லிய மூன்றைந்தேழ்
பொருந்தாவாம் - அல்லனவற்(று)
அட்டம ராசி வயினா
சியமிவையும்
விட்டொழித்தல்
நன்றெனவே வேண்டு.’
- வெண். பாட். 18
‘உயிர் மெய்யில்,
ககரம்முதல் நான்கும்
ஓணம்என்று ஓதுவர்கற்றவரே.’
- ந. 13
‘ஏனைக் குகரம்முதல்இரண்டு
ஆதிரை,என்பர், அப்பால்
ஆனஎழுத்து ஒருமூன்றும்
புனர்பூசமாம் அடைவே
போனபின், நின்றன
மூன்றெழுத்தும் பூசம்என்ப.’
- ந. 14
‘ஏய்ந்த சகரம்
இரேவதிநாள்முதல் மூன்றினுக்கும்
வாய்ந்தஎழுத்து
ஒருநான்கு ஐந்துமூன்றாம்
அவற்றின்வர்க்கத்து
ஆய்ந்த ஞம்மூன்றும்
அவிட்டம் என்றாயின.’
- ந. 15
|