New Page 1
பாட்டியல் - நூற்பா எண் 36, 37

  131


                                    

     ‘ஆவிநான்கு ஐந்தொடு நான்குமாய்ப் பிரிவது

     கார்த்திகை பூராடம்உத் திராடமாம்; மெய்யில்

     ககரம்நான்கு இரண்டு மூன்று மூன்றுஇவை

     ஓணம்ஆ திரைஇரு பூசமாம் முறையே;

     சகரம்நான்கு ஐந்துமூன்று இரேவதி அச்சுவினி

     பரணி;ஞ ஞாஞெஞொ அவிட்டம்; ஏனைய

     தகரம் இரண்டுஏழு தான்கடை மூன்று

     சோதி விசாகமே தூயவான் சதயம்;

     நவ்வரி ஆறுடன் நாடும்மும் மூன்றும்

     அனுடம் கேட்டை ஆய்பூரட் டாதி;

     பகரம்நான்கு இரண்டொடு ஆறும்உத் திராடம்

     அத்தம் சித்திரை; மவ் வாறோடு மூன்றும்

     மூன்றும் மகம்ஆ யிலியம் பூரம்;

     யய்யா உத்திரட் டாதி, யுய்யோ

     மூலம்; வவா விவீரோகணி, வெவ்வே வைவௌ

     மிருகசீ ரிடமென விளம்பினர் புலவர்.’

                                                         

-மு. வீ. யா. ஒ. 73

 ‘நாயகன் முதற்பெயர் ஆதிஎழுத் தின்நாள்

 முதற்கொண்டு ஒன்பது ஒன்பது ஆக

 மங்கலச் சொல்முதல் எழுத்தின்நாள் அளவும்

 எண்ணி இரண்டும் நான்கும் ஆறும்

 எட்டும் ஒன்பதும் காணின் நல்லவாம்;

 ஒன்றும் மூன்றும் ஐந்தும் ஏழும்

 காணின் தீங்குஎனக் கருதப்படுமே.’    

                                                 

 -மு. வீ. யா. ஒ.74

                                                               36

முதற்சீர்க்கு ஒருதனி இலக்கணம்

 

197. எட்டாம் இராசியும் வைநா சிகமும்

    விட்டு முதற்சீர் விளம்புதல் மரபே.

 

இஃது அம் முதல்சீர்க்கு எய்தாதது எய்துவிக்கிறது.