பாட்டியல் -
நூற்பா எண் 39 |
137 |
உயிர்க்குற்றெழுத்து ஒன்றனைச் சார்ந்தே மொழிமுதலாகும். எனவே
தெளிவாக மொழிமுதலாவன ஐ ஒ ஓ
ஒள வ என்பனவே. இவை
மங்கலச்சொல்லின் முதலெழுத்து ஆதல் ஐயை, ஒண்கதிர், ஓங்கல், ஒளடதம்,
வாரிதி (திரு, திங்கள், மலை, அமுதம், கடல்) முதலியவற்றில் காண்க.
ஒத்த நூற்பாக்கள்
‘ஒழிந்த ஐ ஒள ஆய்த எழுத்தும்
கழிந்த வளனவும் நரகர் கதியே.’
- பன். பாட். 26
‘ஒ ஓ இரண்டும் ய ர ல ற ழ எனத்
தொக்கன ஐந்தும் விலங்கின் கதியே.’
’’ 27
‘மன்னா விலங்கொடு நரகர் கதியே.’
’’ 28
‘விலங்கும் நரகும் விலங்கின என்ப.’
’’ 29
‘தேவரும் மக்களும் மேவின பாட்டே.’
’’ 30
‘நாட்டிய ஒ ஓ ய ர ல ழ நல்வன்மைக்(கு)
ஈட்டிய அந்தம் இவை விலங்காம் - காட்டா(து)
ஒழித்த நரகர்க்கென் (று) ஓதினார் இன்ன
எழுத்தாகா ஆதி இடை.’
- வெண். பாட். 20
‘பன்னொன்று பத்துயிர் யம்முதல்மூன்று பன்னேழ்பதினைந்து
என்னும் இவையே விலங்கின்கதி, இயம்பாஎழுத்துத்
தன்னை நரகர்கதி என்றுசாற்றுவர்; தாம்உணர்ந்தோர்
முன்னை மொழிக்கண் வரத்தகாது என்று மொழிவர்களே.’
- நவ. 21
‘ஒ ஓ, ஏர்மருவு யரலழற விலங்காம்; மற்றை
எழுத்துநர கக்கதி,முன் இவைவா ராதால்.’
- சித. பாட். 24
‘ஒ ஓ ய ர ல ழ றவும் விலங்கின் கதியே;
னவள ஐ ஒளவும் நரகர் கதியே.’
- தொ. வி. 293
‘ஒ ஓ ய ர ல ழ ற
விலங்கின் கதிஐ ஒளவொடு வளன
ஐந்தும் நரகர் கதியாம் ... தீயன.’
- மு. வீ. யா. ஒ. 75
39
|