142                      இலக
142  

இலக்கண விளக்கம் - பொருளதிகாரம்


 

  

    ‘முதல்நிரை ஆகி இணைநேர் வழிவரின்

     அதுமதிக் கணம்என்று அறிந்தனர் கொளலே.’                    

-     118

     ‘நேர்அசை மூன்றுஇய மானன் கணமே.’                         

-     119

     ‘நேர்நடு வாகி நிரைஇரு பாலும்

     சேரு மாயின் செந்தீக் கணமே.’

 

-     120

     ‘நிரைநடு வாகி நேர்இரு பால்வரின்

     அலர்கதிர்க் கணம்என்று அறிந்தனர் கொளலே.’                  

 

-     121

    ‘ஈறுநிரை ஆகி இணைநேர் முன்வரின்

     மாறி வந்த மாருத கணமே.’              

 

-     122

     ‘நிலனும் மதியும் நீரும்இய மானனும்

     நலம்மிகும் முதல்வரின்; பிறநான் கும்பகை.’                      

 

-     123

     ‘யாவர்செய் யுட்கும் இனமொடு புணரும்

     மூவசைச் சீரே முதல்நிற் பனவே.’ 
   

-     124

     ‘அவைதாம்,

     பெருக்கம் செய்தலின், வாழ்நாள் பயத்தலின்,

     தருக்கிய சீர்த்தி தன்னைத் தருதலின்,

     மிகுதிரு ஆக்கலின், வேந்தர்க்கும் பிறர்க்கும்

     தகும்எனப் பகரினும், தகாதுமற்(று) அச்சீர்க்கு

     உரிய நாளொடு செய்யுள் செய்யுள்

     பொருபடைக் குரிசில்நாள் பொருந்தாக் கடையே.’                 

-     125

     ‘அவைதாம்,

     தேயம் போக்குதல், செல்வத்து விளிதல்,

     சூனியம் ஆதல், சுழல்நோய் உறுதல்,

     ஊனம் பயக்கும்என்று உரைத்தனர் ஆயினும்

     ஆதி அமுதெழுத்து ஆகிய சீர்கட்கு

     ஓதிய தெய்வத் திற்குரித் தாக

     ஓதிய நாளொடு, பாடப் படுமே.’                               

-     126

     ‘எல்லாக் கணமும் நாள்நலம் இலஎனின்

     பொல்லாங்கு தரும்எனப் புகல வேண்டும்.’                      

-     127