New Page 1
160

இலக்கண விளக்கம் - பொருளதிகாரம்


 

ஒத்த நூற்பாக்கள்

 

     இனி, பிள்ளைத்தமிழ் பற்றிய ஏனைய நூல்களின் நூற்பாக்களைக் காண்போம்.

 

     ‘பிள்ளைப் பாட்டே தெள்ளிதின் கிளப்பின்

     மூன்று முதலா மூவேழ் அளவும்

     ஆன்ற திங்களின் அறைகுவர் நிலையே.’            

- பன். பாட். 174

     ‘ஒன்றுமுதல் ஐயாண்டு ஓதினும் வரையார்.’                   

 - 175

     ‘தோற்றம் முதல்யாண்டு ஈரெட்டு அளவும்

     ஆற்றல் சான்ற ஆண்பாற்கு உரிய.’                          

- 176

     ‘காப்புமுதல் ஆகிய யாப்புவகை எல்லாம்

     பூப்புநிகழ் வளவும் பெண்பாற்கு உரிய.’                        

- 177

     ‘தொன்னில வேந்தர் சுடர்முடி சூடிய

     பின்னர்ப் பெறாஅர் பிள்ளைப் பாட்டே.’                       

- 178

     ‘காப்பொடு செங்கீரை தால்சப் பாணி

     யாப்புறு முத்தம் வருகஎன் றல்முதல்

     அம்புலி சிற்றில் சிறுபறை சிறுதேர்

     நம்பிய மற்றவை சுற்றத் தளவென

     விளம்பினர் தெய்வ நலம்பெறு புலவர்.’                         

- 179

     ‘தந்தை தாயே பாட்டன் பாட்டி

     முந்துற உரைத்தல் முறைமை என்ப.’                           

- 180

     ‘திருந்திய பெண்மகவு ஆயின் விரும்பிய

     பின்னர் மூன்றும் மன்னுநீக்கு என்றனர்.’

- 181

    ‘சிற்றில் சிறுதேர் சிறுபறை ஒழித்து

     மற்றவை மகளிர்க்கு வைப்ப தாகும்.’                        

 - 182

    ‘சிற்றில் இழைத்தல் சிறுசோறு ஆக்கல்

     பொற்பமர் குழமகன் புனைமணி ஊசல்

     யாண்டுஈ ராறுஅதில் எழில்காம நோன்பொடு

     வேண்டுதல் தான்உள விளம்பினர் புலவர்.’                  

- 183