New Page 1

பாட்டியல் - நூற்பா எண் 51

    161


 

     ‘திருமால் அரனே திசைமுகன் கரிமுகன்

     பொருவேல் முருகன் பரிதி வடுகன்

     எழுவர் மங்கையர் இந்திரன் சாத்தன்

     நிதியவன் நீலி பதினொரு மூவர்

     திருமகள் நாமகள் திகழ்மதி என்ப

     மருவிய காப்பினுள் வருங்கட வுளரே.’                       

- பன். பாட். 184

     ‘காப்பின்முதல் எடுக்கும் கடவுள் தானே

     பூக்கமழ் துழாய்முடி புனைந்தோன் ஆகும்.’                  

- 185

     ‘அவன்தான்,

     காவல் கிழவன் ஆக லானும்,

     பூவின் கிழத்தியைப் புணர்த லானும்,

     முடியும் கடகமும் மொய்பூந் தாரும்

     குழையும் நூலும் குருமணிப் பூணும்

     அணியும் செம்மல் ஆக லானும்,

     முன்னுற மொழிதற்கு உரியன் என்ப.’                      

- 186

     ‘விரிசடைக் கடவுளும் வேய்த்தோள் எழுவரும்

     அருளொடு காக்கஎன்று அறையுங் காலைக்

     கொலையும் கொடுமையும் கூறார் ஆகிப்

     பெயரும் சின்னமும் பிறவும் தோன்றக்

     கங்கை திங்கள் கடுக்கை மாலை

     மங்கல மழுவொடு மலைமகள் என்றிவை

     விளங்கக் கூறல் விளம்பிய மரபே.’                       

- 187

     ‘ஒன்பது பதினொன்று என்பது காப்பே.’                   

- 188

     ‘அகவல் விருத்தமும் கட்டளை ஒலியும்

     கலியின் விருத்தமும் கவின்பெறு பாவே.’                  

- 189

     ‘பிள்ளைப் பாட்டே நெடுவெண் பாட்டுஎனத்

     தெள்ளிதின் செப்பும் புலவரும் உளரே.’                  

- 190

     ‘முதற்கண் எடுக்கும் அகவல் விருத்தம்

     எழுத்தின் பகுதி எண்ணினர் கொளலே.’                  

- 191