பாட்டியல் - நூற்பா எண் 51 |
163 |
‘கண்டுரைக்கின் பிள்ளைக் கவிதெய்வம் காக்கவெனக்
கொண்டுரைக்கும் தேவர் கொலைஅகற்றி - ஒண்டொடியாய்
சுற்றத் தளவா வகுப்பொடு தொல்விருத்தம்
முற்றுவித்தல் நூலின் முறை.’
- வெண். பாட். செ.6
‘முறைதருமூன்று ஆதிமூ வேழீறாம் திங்கள்
அறைகநிலம் பத்தும்ஆண்(டு) ஐந்தேழ் -
இறைவளையார்க்கு,
அந்தம் சிறுபறையே, ஆதியாம் மூன்றொழித்துத்
தந்தநிலம் ஓரேழும் சாற்று.’
- வெண். பாட். செ.
7
‘சாற்றரிய காப்புத்தால் செங்கீரை சப்பாணி
மாற்றரிய முத்தமே வாரானை - போற்றரிய
அம்புலியே ஆய்ந்த சிறுபறையே சிற்றிலே
பம்புசிறு தேரோடும் பத்து.’
- வெண். பாட். செ. 8
‘விரிசடைப் பிஞ்ஞகன் வேய்த்தோள்எழுவர் முன்காக்கஎன
அருள்பெறக்கூறின் அவரவர் செய்யும் கொலைஅகற்றி
உரியநற் கங்கை உமையாள் மதியூர்விடை கடுக்கை
விரைமலர்த் தார்மற்றும் மங்கலமாக விளம்புவரே.’
- நவ. 26
‘பதினொரு மூவரும் பங்கயத் தோனும் பகவதியும்
நிதிமுதலோனும் பரிதியும் சாத்தனும் நீள்அமரர்க்கு
அதிபதிதானும் அறுமுகன் ஐங்கரத்து அற்புதனும்
மதிபுனைவேணி வடுகனும் காவல்செய் வானவரே.’
- நவ. 27
‘முன்தந்த காப்புச் செங்கீரை தால்சப்பாணி முத்தத்தொடு
மற்றுஅந்த வாரானை அம்புலி வாய்ந்த சிறுபறையே
சிற்றில் சிதைத்தல் சிறுதேர் உருட்டுதல் சேர்ந்தபத்தும்
சுற்றத்தளவு கவிக்கு எல்லையாய்க்கொண்டு
சொல்லுவரே.’
- நவ. 28
|