பாட்டியல் - நூற்பா எண் 54

  175


                           

                               கூறும் கலம்பகத்தின்,

     ஆட்டிய அம்மானை ஊசல்ஒரு போகும் அற்றது இந்தப்

     பாட்டியல் பன்மணிமாலை என்றுஓதுவர் பாவலரே.’

- நவ. 38   

     கலம்பகத்தம் மானை ஊசல்

     முன்புஒருபோகு ஒழித்ததுபன் மணிமா லைப்பேர்.’    

- சிதம். பாட். 30

     ‘பன்மணி மாலை பன்னில் கலம்பகத்து

     ஒருபோகு அம்மானை ஊசல்இவை நீத்து

     அகவல் வெள்ளை அருங்கலித் துறைஎன்று

     அவைசெறி நூறுஅந் தாதியாய் வருமே.’

                                               - தொ. வி. 280

    ‘அறைந்த கலம்பகத்து அம்மானை ஊசல்

     ஒருபோகு என்பன ஒழியச் சிறப்பித்து

     அந்தா தித்துநூறு அறைவது பன்மணி

     மாலை என்ப மாண்புஉணர்ந் தோரே.’                  

 - பி. ம. 7

    ‘அலகுறு கலம்பகத்துள்வரும் ஒருபோகு

          அம்மானை ஊசல் மூன்றும்

    அன்றி மேல்சொல்லிய உறுப்புஅமைத்து அவ்வாறு

          அரற்றல் பன்மணி மாலையாம்.’                  

- பி. தீ. 12

    ‘முற்கூ றியகலம் பகத்துள் வரும்ஒரு

     போகும் அம்மனை ஊசலும் போக்கி

     ஏனை உறுப்புக்கள் எல்லாம் அமையப்

     பாடுவது அதுதான் பன்மணி மாலை.’           

- மு. வீ. யா. ஒ. 94

                                                             54

 

மும்மணிக்கோவை

 

815. அகவல் வெண்பா அசைஎண் கலித்துறை

    தொகைமுப் பதுபெறச் சொற்றொடர் நிலையின்

    கூறுதல் மும்மணிக் கோவை ஆகும்.

 

இது மும்மணிக்கோவை இலக்கணம் கூறுகின்றது.